Step into an infinite world of stories
History
மராத்திய மண்ணில் பிறந்து, தஞ்சை மண்ணில் ஆட்சி புரிந்து மக்களின் மனங்களை வென்றவர்! எல்லா செயல்களிலும் தன் பெயரை நிலைநாட்டி ஆளுமைத் தன்மையுடன் விளங்கியவர்! தமிழுக்குத் தொண்டாற்றியவர்!
அவர்தாம் தஞ்சைக்குப் புகழாரம் சூட்டிய மாமன்னர் “இரண்டாம் சரபோஜி” ஆவார். அம் மன்னருடைய வாழ்க்கை வரலாறு தான் “சரித்திர நாயகன் இரண்டாம் சரபோஜி”என்னும் வரலாற்று நூலாகும்.
உலகப் புகழ்ப் பெற்றுள்ள, சரசுவதி மகால் நூலகம், மராட்டிய அரண்மனை, மனோரா கோட்டை, சார்ஜா மாடி, கோவில்கள், முதலியவற்றைத் தோற்றுவித்தவர்! இத்தகைய பெருமை வாய்ந்த மாமன்னரின் சிறப்புகளை திருமதி. இரா.இந்திராபாய் அவர்கள் தக்க வரலாற்று ஆதாரங்களுடன் சுவைபட எடுத்தியம்பியுள்ளார்.
அருமையான சரித்திர நூல் - குறிப்பாக இளைய தலைமுறையினருக்குப் பயன்படும் நூல். எழுத்துலகிற்குப் பெருமை சேர்க்கும் இனிய நூல் என்றால் மிகையாகாது!
Release date
Ebook: 1 June 2022
English
India