Step into an infinite world of stories
Puli Thevar was a Tamil Palaiyakkarar who ruled Nerkattumseval, situated in the Sankarankoil taluk, Tenkasi,formerly Tirunelveli Tamil Nadu. He is notable fighting against East India Company at 1759 - 1761 in India. Ondiveeran and Venni Kaladi were the generals of Thevar's army, to fight against the East India company. He is known for the Polygars revolt against the British. He maintained a good relationship with the Kingdom of Travancore but later the allegiance was broken by one Yusuf Khan.
பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.சுதந்திரமாக சுற்றி திரிந்தவர்களை, அந்த சுதந்திரத்திற்காகவே சுற்றி திரிய வைத்தவர்கள் ஆங்கிலேயர்கள். கடலையும் கடந்து சென்று வென்ற தமிழர்களை, கடல்தாண்டி வந்தவர்கள் நம்மை அடிமையாக்கி, அவர்களின் அதிகார பசிக்கு நம்மை இரையாக்கி, நம் அடையாளங்களை மண்ணோடு மண்ணாக்கி நம்மை 200 ஆண்டுகளாக அடக்கி ஆண்டார்கள். “நம் இடத்திற்கு வந்து நம்மை ஆளுவதா! நம் எதிர்ப்பே அவர்களுக்கு எமன்” என்று முதல் போராட்ட குரல் ஒலித்தது தென்னிந்தியாவில் தான்! அன்றும் இன்றும் வட இந்தியத் தலைவர்கள் தான் எளிதில் வான்புகழ் அடைகிறார்கள். இந்தியா முழுவதும் அறிந்து போற்றும் பெருமை அவர்களுக்கு எளிதாக கிடைத்து விடுகிறது. ஏன் உலகம் அறியும் வாய்ப்பும் அவர்களுக்கு எளிதாகி விடுகிறது. ஆனால் தமிழ்நாட்டு தலைவர்கள் அவர்களுக்கு இணையாக அல்ல, அவர்களுக்கும் மேலாக அறிவும் ஆற்றலும் பெற்று இருந்தாலும், அவர்களுக்கான அங்கீகாரமும் அவர்களுக்கான அடையாளமும் கிடைப்பது என்பது ஒரு போராட்டமாகவே இருக்கிறது. இதற்கு காரணம், உலக தலைவர்களை காட்டிலும் சிறந்த தலைவர்களும் சிறந்த அறிவாளிகளும் நம் தமிழ்நாட்டில் உள்ளார்கள் என்பதை நம் தமிழர்களே முதலில் தெரிந்து கொள்வதில்லை. மேலும் செய்தித்தாள்களும் பிறருக்குத் தரும் பெருமையும் விளம்பரத்திலும், ஒரு சில பங்கு மட்டுமே நம் தமிழர்களுக்குத் தருகிறார்கள். அதனால் தான், வடநாடு புகழ்மிக்க தலைவர்கள் நிறைந்த நாடாக இருக்கிறது. தமிழ்நாடு திக்கற்று திகைக்க நேர்கின்றது. இந்த புறக்கணிப்பு என்பது பல நூறு ஆண்டுகளாக இருந்து தான் வருகிறது.
Release date
Audiobook: 30 October 2022
English
India