Step into an infinite world of stories
Fiction
அறநெறி முதற்றே அரசின் கொற்றம் என அரசுக்கே அறம் சொன்ன பண்பாடு நம்முடையது. அறம் பிறழ்பவனுக்கு அதுவே கூற்றுவனாக மாறிவிடும் என்பதைப் பல கதைகள் எடுத்துப் பேசுகின்றன. அடிப்படைப் பண்பில் ஒழுங்கில்லாதவனுக்கு வாழ்க்கை வீணே. ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் எண்ணங்களே எல்லாவற்றுக்கும் காரணமாக அமைகின்றன. ஆகவே தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று அழுத்தமாகச் சான்றோர் உரைத்தார். குடும்ப வாழ்வில் சரியில்லாதவனுக்குக் குடும்பம் இன்றிப்போகும் எனும் சிறு உண்மையே இந்நாவல். காலங்கடந்தபின் எல்லாமும் கடந்துபோகின்றன. கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் பயனற்றதுதான். நீச்சல் தெரியாதவன் பெருங்கடலில் உழல்வதைப் போலவே நெறிபிறழ்ந்தவன் குடும்பக் கடலில் துன்புறுகிறான். தீர்வற்றதும் சிலருக்கு வாழ்க்கையாக அமைந்துவிடுவது ஊழ்வினைதான்.
Release date
Ebook: 5 March 2024
English
India