Step into an infinite world of stories
அம்புஜம் நான்கு கேள்விகளைக் கேட்டாள்... சரவணனைப் பார்த்து அல்ல... அர்ஜீனைப் பார்த்து அந்தக் கேள்விளைக் கேட்டு வைத்தாள்...
"சரவணன் கேட்கிறதிலயும் ஒரு நியாயம் இருக்கு அர்ஜீன்... அந்தப் பணம் உன் பொறுப்பில்தான இருந்துச்சு...?"
"பாட்டி...?"
"உன் பொறுப்பில் இருந்த பணம் எப்படிக் காணாமல் போச்சு...?"
"பாட்டி...?"
"களவு போயிருந்தாலும் அதுக்குக் காரணமா உன்னைத்தானே சொல்லுவாங்க...? அப்படியிருந்தும் ஏன் அஜாக்கிரதையாய் இருந்த அர்ஜீன்...?"
"பாட்டி..."
"இதுக்கெல்லாம் பதில் சொல்ற பொறுப்பு உனக்கு இருக்குலே... தெரிஞ்சிருந்தும் ஏன் பணத்தை தொலைச்சே அர்ஜீன்...?"
"பாட்டி..."
அர்ஜீன் திகைத்தானோ இல்லையோ... பாட்டி கேட்ட நான்கு கேள்விகளில் காவ்யா திகைத்து சிலையாக சமைந்தாள்...
எந்த காரணத்திற்காக இந்த கேள்விகளையெல்லாம் அர்ஜீன் கேட்க நேரிட்டது? வாசிப்போம்... எங்கிருந்தோ ஆசைகள் - பாகம் 4.
Release date
Ebook: 5 March 2024
English
India