Step into an infinite world of stories
Fiction
இந்த உலகில் பெண், பொன், மண் இவைகளை நோக்கியே நாம் ஓடிக்கொண்டு இருக்கிறோம். பணத்தை மையமாக வைத்துதான் வாழ்க்கை சுழன்று கொண்டுள்ளது. அதிகாரத்தையும், பணபலத்தையும் வைத்தே சமூகம் மனிதனின் தகுதியை நிர்ணயிக்கிறது. துறவறம் என்பது வாழ்க்கையில் தோல்விகண்ட ஒருவருக்கானது என சமூகம் விலகிக் கொள்கிறது. கோயிலில் தெய்வத்தின் சந்நதியில் இருகரம் கூப்பி வணங்கி பணத்தையே நாம் யாசகமாக கேட்டுக் கொண்டிருக்கிறோம். சமூகம் உனக்குள் கேள்விகள் எழாமல் பார்த்துக் கொள்கிறது. உலகை வெல்வது பற்றி சமூகம் பேசும். தன்னை வெல்வதைப் பற்றி அதற்குத் தெரியாது. நான் யார் என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்பவனை சமூகம் கலகக்காரனாகத்தான் பார்க்கும். சாக்ரடீஸ், இயேசு போன்றவர்கள் மரணத்தைக் கண்டு பயந்து நடுங்காமல் இருந்ததினால் தான் வரலாறு இன்னும் அவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையே தேடல்தான் தேடிக் கண்டு கொண்டவர்கள் சாமன்யராக மக்கள் மத்தியில் நடமாட முடியாது. மரணம் ஒரு விடுதலை என்று உணரும் ஒவ்வொருவரும் தீர்க்கதரிசிகள் தான்.
பேரன்புடன், ப. மதியழகன்
Release date
Ebook: 3 January 2020
English
India