Step into an infinite world of stories
ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கதையின் முடிவு இப்படி ஆகுமோ அப்படி ஆகுமோ என்ற எதிர்பார்ப்போடு செல்லுகிறது. இதுபோன்ற கதைகளை ஆங்கிலத்தில் - ENIGMA என்பார்கள்.
மனைவியை இழந்த நடனசபாபதிமீது மகள்கள் யாமினியும் பகவத்கீதையும் பொழியும் பாசமும் பரிவும் அவருடைய மன நிம்மதிக்காகக் கர்வம் பிடித்த வீணை மேதையான இளைஞனின் காலில் விழுந்து அவமானம் ஏற்கும் தியாகமும் -
கலைஞனை அவனது பாதையிலேயே சென்று வென்று காட்டும் யாமினியின் கலையார்வம் நாவலுக்கு வித்தியாசத்தையும் விறுவிறுப்பையும் ஊட்டுகின்றது. அமரர் எஸ். ஏ. பி. அவர்களுக்கு ஒரு 'காதலெனும் தீவினிலே' போல ரா. கி. ரங்கராஜன் அவர்களுக்கு ஒரு 'படகுவீடு' போல அவர்களுக்கு “ என்று மெச்சத் தோன்றுகிறது.
பாக்கியம் ராமசாமி, என்ற புனைப்பெயரில் நகைச்சுவையாக எழுதிச் சிரிக்க வைக்கும் பேனாவினால், கலை ஆழமுள்ள நவீனத்தையும் உருவாக்க முடியும் என்பதன் நிரூபணமே பூங்காற்று.
வேகமாக வளர்ந்து வரும் கலை மேதைகளான கலைஞர்களின் கவனத்துக்கு மட்டுமல்ல, சுவையான, பழுதற்ற நல்ல நாவலை நாடுபவர்களுக்கும் பூங்காற்று ஒரு நல்லவிருந்து.
Release date
Ebook: 3 January 2020
English
India