Step into an infinite world of stories
Fiction
என் மதிப்பிற்குரிய வாசகர்களே! வணக்கம்.
இது என் ஐந்தாவது நாவல். ஒவ்வொரு நாவலுக்கும் கதாபாத்திரங்களையும், சம்பவங்களையும், என்னைச் சுற்றியிருக்கும் சமூகத்திலிருந்தே எடுத்துக் கொள்கிறேன். ஆனால் பெரும்பாலும், நிஜ வாழ்க்கையில் சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், தனிப்பட்ட குணாதிசயங்களாலும் வாழ்க்கையை மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொண்டு வருத்தங்களுடனேயே வாழ்ந்து முடித்து விடுகிறார்கள். என் நாவல்களில் நான் எப்போதும் ஒரு சுமுகமான சுபமான முடிவுகளையே தருவதற்கு விரும்புவதால் சம்பவங்களையும், பின்னணிகளையும், உரையாடல்களையும் அதற்கேற்றபடி அமைத்துக் கொள்கிறேன்.
'நெஞ்சுக்குள் ஒரு நெருஞ்சி முள்' கதாநாயகி நீலவேணியை ஒரு பத்திரிகையாளராக முதன் முதலில் சந்தித்தபோது அதிர்ச்சியடைந்து, செயலிழந்தும் போனேன். அதுவரை நான் ஊனமுற்றவர்களை சாலைகளில் கடந்து போகும்போதும், திரைப்படங்களிலும் மட்டுமே சந்தித்திருந்தேன். ஆனால் நிஜமாகவே கண்களுக்கு முன் இப்படி ஒரு பெண்... மிக வெற்றிகரமாக புகழ்பெற்ற கல்வி ஸ்தாபனம் ஒன்றில் மிக அரிய பாடப்பிரிவின் பேராசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருப்பதை அறிந்ததும் நான் அடைந்த வியப்பிற்கு அளவே இல்லை. அவரே காரை ஓட்டுகிறார்! அவரே ஓரளவு சமையல் செய்கிறார்! எல்லாம் பிரமிப்பாக இருந்தது. அவரை இந்த அளவிற்கு உயர்ந்து நிற்க அவருடைய பெற்றோர்கள் செய்திருக்கிற தியாகத்தை எழுத்தில் வடிக்க இயலாது. அதைவிட உலக மகா வியப்பாக இத்தகைய பெண்ணை தானே முன்வந்து தன் மனைவியாக்கிக் கொண்டு, அவளைத் தாயார் ஸ்தானத்திற்கும் உயர்த்தி வைத்துள்ள அவரின் கணவரைப் பார்த்தபோது... தெய்வப் பிறவி என்பார்களே அவர்தானோ இவர் என்று ஆச்சர்யப்பட்டேன்.
நேரில் வெற்றிப் பெண்மணியாக உலா வந்து கொண்டிருக்கும் அந்தப் பெண்மணியை என் கதாநாயகியாகக் கொண்டு... சம்பவங்கள் அனைத்தையும் கற்பனையாகக் கொண்டு இந்த நாவல் பிறந்துள்ளது.
உடல் குறைகள் உள்ளவர்களிடம் நம் அன்பை வெளிப்படுத்துவது... அவர்களுக்கு எத்தகைய தெம்பைத் தரும் என்று என் புரிதலை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
அன்பு செலுத்துவது ஒன்றுதான் இந்தச் சமுதாயத்தின் உயர்வுக்கு உயிர் நாடி என்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன். அத்தகைய புரிதலை அனைவருக்கும் ஆண்டவன் அருள வேண்டும் என ப்ரார்த்தித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி. என்றும் உங்கள்
ஸ்நேகமுள்ள சியாமளா
Release date
Ebook: 23 December 2019
English
India