Step into an infinite world of stories
5
Personal Development
“கேசரி + பூரி” - நாவுக்கு மட்டுமல்ல; வீட்டுக்கும் நாட்டுக்கும் தேவைதான்!
“வித்தியாசப்படுகின்றவர்களே வெற்றி பெறுகின்றார்கள்” என்பதற்கு, என் கண் முன் தெரியும் உதாரணம், இளைஞர் முருகபாரதி.
“ஆரம்பமே அசத்தலாய் இருக்க வேண்டும். தலைப்பைப் பார்த்தவுடன் படிக்கத் தூண்ட வேண்டும்!” இது, என் மானசீக குரு ‘வார்த்தைச் சித்தர்’ வலம்புரி ஜான், என்னிடம் வலியுறுத்திச் சொல்லும் கருத்து.” முருகபாரதியும், ஒருவேளை வலம்புரி ஜானிடம் வரம் பெற்றவர்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அவரது புத்தகங்களுக்கு ரசம், கேசரி, பூரி என்று பெயர் வைக்கிறார்; தன் நிறுவனத்திற்கு “யோசி” என்று பெயர் வைத்திருக்கிறார். பாரதி போன்று ஞானச் செருக்கு இருப்பதால்தான், இவர் ‘முருக பாரதி’ - யானாரோ...? சரி. முதலில் கேசரிக்கு வருகிறேன். அது என்ன கேசரி? “ஓகே சரி” என்பதே மிகச்சுருக்கம். அதையும் சுருக்கி, “கேசரி” என்பது சரியா?
சரி என்றால் எல்லாம் சரி. சரியாய் இருப்பதாலும் இது சரியே. “புத்தகத்தைப் படிக்கும் முன், இவர் குழப்புகிறாரே?” என்று என்னை நீங்கள் கேட்டால்... நான் சரிதான் என்று சொல்வதற்காக, நூலை முழுதாய்ப் படிக்க வேண்டும்.
Release date
Ebook: 7 July 2022
Tags
English
India