Step into an infinite world of stories
இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்த வெள்ளைக்காரச் சிறுமியொருத்தி தன் கூட்டத்தினரிடமிருந்து பிரிந்து, தமிழகத்தின் பின் தங்கிய கிராமம் ஒன்றில் வந்து சேருகிறாள். ஊர் மக்கள் அவளை அழைத்துக் கொண்டு போய் ஊர் பண்ணையாரிடம் விட, முறைப்படி காவல்துறைக்கு புகார் தந்து விட்டு எல்லோரும் காத்திருக்கின்றனர். நீண்ட நாட்களாகியும் அந்தச் சிறுமியைத் தேடி வாரும் வராததால், பண்ணையார் தானே ஊர்ப் பஞ்சாயத்தைல் வைத்து அச்சிறுமியைத் தத்தெடுத்து வளர்க்கிறார்.
தன் பண்ணையில் பாடுபடும் வெள்ளையனின் அதீத விசுவாசக் குணம் காரணமாய் அவனை பண்ணையாருக்கு மிகவும் பிடிக்கும். ஒரு முறை அவன் தன் ரத்தத்தைக் கொடுத்து பண்ணையாரின் உயிரைக் காப்பாற்ற, அவனுக்கே அந்த வெள்ளைக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறார்.
கிராமத்தில், ஒரு வெளி நாட்டுக்காரப் பெண் சட்டப்படியான எந்தவொரு ஆவணமும் இல்லாமல் வாழ்வதை ஒரு பத்திரிக்கைக்காரன் தன் பத்திரிக்கையில் எழுதி விட, அது பெரிய பூதாகர பிரச்சினையாகின்றது. கலெக்டர் கிராமத்திற்கு வருகிறார்... அடுத்து நடந்தது என்ன?...
நாவலுக்குள் உண்டு விடை. வாசியுங்கள்...
Release date
Ebook: 17 May 2021
English
India