Step into an infinite world of stories
4.3
Short stories
அரசூர் பஞ்சாயத்து மதுவின் கேடு பற்றி விளக்கும் கதை. அரசூர் சின்னசாமி படையாட்சியின் முதல் தார மகள் அமிர்தம் .14 வயதில் தந்தையை இழந்து சேமங்கலம் மாமன் மகன் சந்திரகாசனை மணக்க விரும்புகிறாள். இளைய தாரம் காமாட்சி தன் தம்பிக்கு கட்டி வைக்க விரும்புகிறாள். பஞ்சாயத்தில் அமிர்தம் விருப்பத்திற்கே தீர்ப்பாகிறது . அப்பன் சொத்து கிடையாது என்கிறான் சித்தி. கல்யாணம் செய்து கொண்ட மாமன் மகன் குடிப்பழக்கம் மட்டுமே உள்ள நல்லவன். மகன் பிறக்கவே காசு சேர்க்க கள் இல்லாத ஊரான பினாங்குக்கு செல்கிறான். ஆனால் அங்கும் மதுக்கடை இருந்ததால் ஐந்து வருடம் கழித்து 100 ரூபாய் அனுப்பினான். ஆனால் கள்ளுக்கடை பாக்கி என்று பஞ்சாயத்து தீர்ப்பு கூறி பத்து ரூபாய் மட்டும் கொடுக்கப்பட்டது. குழந்தை அம்மையில் இறக்க அமிர்தம் ஆற்றில் மூழ்கி இறக்கிறாள். தன்னிடம் இருந்த 30 வெள்ளி பினாங்கு பணம் திருடு போய்விடவே மனைவி குழந்தையை பார்க்க, ரூபாய் 50 திருடி இரண்டு வருடம் ஜெயில் வாசம் செய்கிறான். அங்கு கள் இல்லை, திருந்தி வந்தபோது யாருமில்லாமல் குப்பை மேடு மட்டுமே காண்கிறான்.
Release date
Audiobook: 10 April 2023
English
India