Step into an infinite world of stories
“எனக்குச் சத்தியம் பண்ணு.”
“என்னன்னு?”
“கொள்ளுப்பாட்டனை மாதிரி மூணு கல்யாணம் பண்ணமாட்டேன். பாட்டனை மாதிரி இரண்டு கல்யாணம் பண்ணமாட்டேன். அப்பனை மாதிரியும் இரண்டு தாரத்துக்கு ஆசைப்படமாட்டேன். வம்சாவளி புத்தி எனக்கு வரவே வராது. ஒழுக்கமா, ஒருத்தியை மட்டும் நேசிச்சு, அந்த ஒருத்தியோட மட்டும் கடைசி வரைக்கும் வாழ்வேன்’னு சத்தியம் பண்ணிக்கொடு.”
“எதே? இவ்வளவு கஷ்டமான சத்தியமெல்லாம் கேட்டால், நான் எப்படி பண்ணுறது?”
“என்னால முடியாது. அப்பா இரண்டு கல்யாணம் பண்ணால் என்ன? இரண்டு பேரையும் இரண்டு கண்ணா...” என்று அவன் முடிப்பதற்குள்,
“இது வேலைக்கு ஆகாது அத்தை. ரூமைப் பூட்டுங்க. சின்னவரு திண்ணையில ஒத்தையா படுத்துத் தூங்கட்டும்.” என்றாள் தர்ஷனா.
“அடப்பாவிகளா! அண்ணிங்களா நீங்கெல்லாம்? சரியான வில்லிங்க! என் அண்ணனுங்க இரண்டு பேரும் ஏன் பல்லி மாதிரி இருக்கானுங்க’ன்னு இப்பத்தான் தெரியுது.” என்றவாறே பாலாம்பிகைக்கு சத்தியம் செய்து கொடுத்தவன், புன்னகையோடு தனக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்யேக அறை நோக்கி நடந்தான்.
Release date
Ebook: 7 September 2023
English
India