Step into an infinite world of stories
Short stories
நாளாம் நாளாம் திருநாளாம்! ஒவ்வொரு நாளும் திருநாள் தான் என்றாலும் வருடந்தோறும் வரும் பண்டிகைத் திருநாள் நம்மில் பெருமகிழ்வைப் பூக்கச் செய்பவை. அவற்றையே தலைப்பாக வைத்து சங்கப்பலகை என்னும் குழுவில் கதை படைக்கச் சொல்ல கோலாகலம் கொண்டாட்டம் தான்! இவை அனைத்தும் ஆடிப்பெருக்கு முதல் தைப்பூசம் வரை தொகுக்கப் பட்ட பன்னிரெண்டு கதைகள்.
மிலாடிநபி, கிறிஸ்துமஸ்... ஏன் சுதந்திர தினத்துக்கும் கதை உண்டு. பன்னிரெண்டில் ஆடிப்பெருக்குக்கு எழுதிய நெஞ்சப் புனல் என்ற கதையும் மிலாடி நபிக்கு எழுதிய இது எங்கள் புனிதப் பயணம் என்ற கதையும் பொங்கலுக்கு எழுதிய கனுப்பிடி காதல் என்ற கதையும் பணப் பரிசைப் பெற்றன என்பதை பெருமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். எனது கதைகளைத் தொடர்ந்து வெளியிடும் புஸ்தகா நிறுவனத்துக்கு நன்றிகள் பல.
Release date
Ebook: 24 April 2023
English
India