Step into an infinite world of stories
Fiction
“சிவகிரி” அழகான, அமைதியான கிராமம். வெள்ளந்தி மக்கள் மட்டுமே வாழும் புண்ணிய பூமி. ஊருக்கு வெளியே மலைக் கோயில். அதன் உச்சியில் பச்சை நாயகியம்மன் சன்னதி.
எங்கிருந்தோ வந்த பைத்தியக்காரன் ஒருவன் மலைக்கோயில் உச்சியில் அமர்ந்து கோவிலுக்கு சாமி கும்பிட வருபவர்களையெல்லாம் தடியால் அடித்து விரட்டுகிறான். ஆரம்பத்தில் அதை மனநிலை சரியில்லாதவனின் செயல் என்று நினைத்த ஊர் மக்கள் அவன் அம்மனுக்கு பூஜை செய்யும் பூசாரியையும் அடித்து விரட்டி விட, ஊர்த்தலைவர் வீட்டில் கூட்டம் நடக்கின்றது.
வரவிருக்கும் பௌர்ணமிப் பொங்கல் விழாவிற்குள் அவனைத் துரத்தியடிக்க யோசனை கேட்கப்படுகின்றது. இளைஞர் கூட்டம் முன் வந்து, மறுநாளே மலை ஏறுகின்றது. ஆனால், போன வேகத்தில் அடி வாங்கித் திரும்புகின்றது.
செல்லக்கிளி என்னும் பெண் தனியாளாய்ச் சென்று அவனை விரட்டத் துணிய, தாறுமாறாய் அடிபட்டு மனநிலை பிசகித் திரும்புகிறாள்.
காவல் துறை வரவழைக்கப்படுகிறது. காவலர்களும் தாக்கப்பட, துப்பாக்கிச் சூடு நடைபெறுகின்றது. எந்த துப்பாக்கி குண்டும் அவனைத் துளைக்கவில்லை.
காவல் அதிகாரிகளும், ஊர் மக்களும் திகைத்துப் போய் நிற்கின்றனர். பேய் மழை அடிக்கத் துவங்குகின்றது. வானம் இடிகளையும், மின்னல்களையும் அனுப்புகின்றது.
அவன்… அக்கோயிலை விட்டு விலகினானா?
அவன் யார்?.... எதற்கு அங்கு வந்தான்?
உங்கள் கேள்விகளுக்கு நாவலுக்குள் விடையுண்டு. வாசியுங்கள்.
Release date
Ebook: 10 April 2024
English
India