Step into an infinite world of stories
Religion & Spirituality
கண்ணா வருவாயா என்ற இந்த நூல் ஒரு பெரிய காதல் கடிதம். கடமையைச் செய் என்று கண்ணன் சொல்வதும் காதலின் வெளிப்பாடுதான். உன் இயல்புக்கு ஏற்ற தொழிலில் இருப்பாய் என்பதும் காதலால் வந்த கரிசனம்தான்.
இந்த நூலை எழுதிய போது நான் இதுவரை எழுதிய எழுத்துக்கள் எல்லாமே என் மனதில் நிழலாடின. சில சமயம் என் கருத்தை விளக்குவதற்காக என் நூல்களிலிருந்தே மேற்கோள் காட்டியிருக்கிறேன். சில உவமைகளையும் உருவகங்களையும் மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன். ஒரு அத்தியாயத்தில் கையாண்ட உவமையை மற்றொரு அத்தியாயத்தில் வார்த்தை பிசகாமல் கையாண்டிருக்கிறேன். மனதில் இருப்பதை எல்லாம் கொட்டிவிட வேண்டும் என்ற ஆதங்கத்தில்தான் அப்படிச் செய்திருக்கிறேன். சமயங்களில் நான் என்னை ஒரு பாமரனாகவே உணர்ந்திருக்கிறேன்.
இந்த நூல் ஒரு காதல் கடிதம் என்று பார்த்தோம். சரி காதல் கடிதத்தை எப்படிப் படிப்பீர்கள்? அகராதிகளையும் நிகண்டுகளையும் அருகில் வைத்துக் கொண்டா? ஒரு சட்ட வல்லுனரின் பார்வையிலா? இல்லை ஒரு இலக்கிய விமர்சகரின் கண்ணோட்டத்துடனா? இல்லை.
காதல் வயப்பட்ட இதயத்துடன் இதைப் படியுங்கள். பிடித்த பகுதிகளைப் பென்சிலால் குறித்து வைக்காதீர்கள். கண்ணீரால் குறித்து வையுங்கள்.
Release date
Ebook: 12 August 2021
English
India