Step into an infinite world of stories
Short stories
'கடவுளின் குரல் ' _ இது ஓர் இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை.சுகம் பெற வேண்டி ஒரு மருத்துவ மனையில் 'காசு' கட்டி ' ப் பெற்ற துயரம் ததும்பும் அனுபவங்களின் கோர்வை.
'முதல் பலி' இதுவும் பரிசுக் கதைதான்.காவிரி நதியின் பூர்விக இடமான தலைக் காவிரிக்குச் சென்று விட்டு வந்த வேகத்தில் புனையப்பட்ட _கிட்டத்தட்ட பெருந்தொற்றைப் பிரதிபலிக்கும் ஒரு பயணக் கதை.
என் தந்தையின் இறுதிக் காலத்தைத் தொட்டுத் தழுவும் __ஏறக்குறைய ஓர் உண்மைக் கதை வடிவம்.எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய ' கடலும் கிழவனும் ' புதினத்தின் செறிவான பகுதியை இக்கதையில் செருகியிருக்கிறேன் .
'கருமேகம்' __நான் ஓர் அரசுப் பணியாளராக இருந்ததால் , கொஞ்சம் கற்பனையும் கலந்து... மற்றபடி யதார்த்தமாய் நடப்பதுதானே...!
'தெரியாதவள் ' ' ஏன் சார் நேசிக்கிறீங்க..' இந்தக் கதைகள் ரொமாண்டிக் வாசனையுடன் ! 'இலந்தை மர இலைகளை எண்ணுகிறவன் '--என் இல்லத்தையொட்டி செறிந்து கிடக்கும் இலந்தை மரத்தின் தாக்கத்தில்... புனைவு தான்.
Release date
Ebook: 10 April 2024
English
India