Fakta
ஆர். அபிலாஷ் கடந்த பத்து வருடங்களாக உயிர்மை, தீராநதி, அம்ருதா, குமுதம், ஆனந்த விகடன், தி ஹிந்து, தினமணி, கல்கி உள்ளிட்ட தமிழ் இடைநிலை இதழ்களிலும் வெகுஜன இதழ்களிலும் எழுதி வருகிறார். இதுவரை மூன்று நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கட்டுரைத் தொகுப்பு, வாழ்க்கை சரிதை, ஒரு கவிதைத் தொகுப்பு, ஹைக்கூ கவிதைகளின் மொழியாக்க தொகுப்பு ஆகியன பிரசுரித்திருக்கிறார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014இல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016இல் பாஷா பரிஷத் விருதும் இவரது இலக்கிய பங்களிப்புக்காக வழங்கப்பட்டது. ஆர். அபிலாஷ் தற்போது பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராக பணி புரிகிறார்.
விக்கிப்பீடியா பக்கம்: https://en.wikipedia.org/wiki/Abhilash_Chandran_R
Udgivelsesdato
E-bog: 5. februar 2020